Wednesday, January 20, 2010

சந்தேகம் ஆரம்பமாகிடுச்சு டோய்



என் ப்ளாக் ல சும்மா காபி வடை டி நு அடுத்தவங்க சரக்கே சுட்டு போடறேன்னு நண்பர்கள் மத்தியில கடும் புரணி நிலவ்ரதால ஒரு ரோஷதில நானும் என் லொள்ளு வேட்டை ய ஆரம்பிச்சுட்டேன்...சந்தேகமே வேணாம் இது என் 100% சொந்த நொந்த வெட்டி சரக்கே ...


என் முயற்சில வெட்டிகாரன் சாரி வேட்டைக்காரன் படம் பத்தின பத்து சந்தேகத்த உங்க கிட்ட பகிர்ந்துகிறேன்..இது சிரிக்க மட்டும் இல்ல கண்டிப்பா சிந்திக்கவும் செய்ங்க !!!

சந்தேகம் ஆரம்பமாகிடுச்சு டோய்:.....

1.)நம்ம டைரெக்டர் பா(ப்ரே)பு சிவனுக்கு சிந்தனையே அலாதி தாங்க முதல் அறிமுக காட்சி ல ஏ விஜய் கு 120 ஸ்பீட் ல போயிட்டு இருக்கற வண்டியில துரத்திட்டு வந்தவரு எப்டி கௌ பாய் மேக் அப் கரெக்ட்டா போட்டுக்கிட்டு வந்து ஒரு போலீசையே மிரட்டி எல்லா மேட்டர் உம் கரெக்ட் பண்றாங்க ?இப்டி கூட ஒரு குடி மகன் பண்ண முடியுமா ?
இதுல பந்தா டயலாக் வேற நேத்து தாசில்தார் முந்தாநாள் கலெக்டர் அப்டின்னு ..?இன்னாங்கப்பா இது ???????



2.).லட்ச்சதில ஒருத்தர் கஷ்டப்பட்டு படிச்சு டிஜிபி ஆனா எல்லாருமே காலேஜ் ல படிச்சு ஆட்டோ ஓட்டினா போலிஸ் ஆகலாம் நு ஐடியா எப்படிங்க வந்துச்சு ?
பர்ஸ்ட் இயர் ஆர்ட்ஸ் படிச்சு எல்லாரையும் அடிச்சா போலிஸ் ஆகிடலாமா????? ?


3)மெட்ரோ சட்டியில ...சாரி சிட்டியில ட்ராபிக் போலீஸ் இல்லாத இடத்துல யார் வேணா அந்த ட்ராபிக் சரி பண்ணலாமா ?அது ஒரு டெரிபிக் ஆ இருக்கே நைனா ?????

4).அவ்வளவு உயரத்துல இருந்து அடர்ந்த காடு இருக்கற இடத்துல அருவி ல குதிச்ச கீரோ அது எப்டி ஒரு அடி கூட படாம தப்பிக்கிறாரு? ஒரு சின்ன ரத்த காயம் கூட இல்லாம அதே ஆட்டோ ஸ்டைல் ள்ள வெளியில வராரு ?ஏன் யா தண்ணில அந்த மாஞ்சா துணி கூடவா பொய் இருக்காது ?இல்ல அதை தான் எவனாச்சும் தேடி எடுத்து கொண்டாந்து போட்டுக்கோ நைனா ன்னு குடுத்தாங்களா ?????





5)ரெண்டு சீன்ல ஏ பணக்காரன் ஆனா கீரோ அவரு பணத்தை காட்ட எப்பவும் கொலைவெறியோட சுட்டெரிக்கிற வெயில்ல ஜெர்கின் ல அலையனுமா என்ன ???



6)ஏன் மிஸ்டர் பாப்ரே சிவன் கீரோ க்கு கொலை வெறி வரணும்னா இரக்கம் வரணுன்க்ராதுக்காக புச்சா கல்யாணம் ஆனப்ரெண்ட போட்டு தள்றாங்க ?
பின்னாடி எத்தனை எருமைங்க இருக்கறாங்க ?மொட்டை ,தடிமாடு,எருமை ன்னு அதுல ஒன்னை போட்டு தள்ள வேண்டியது தானே ?எப்போ தான் இவங்க மாறுவாங்க ?கீரோ வோட ப்ரெண்டு ,ப்ரெண்டு பொண்டாட்டி ,குழந்தை ,அம்மா தங்கச்சி பக்கத்து வீடு குழந்தை இப்படி இவங்க யாராச்சும் செத்தா தான் கீரோ கு கோவம் வரும் ங்கற ட்ரெண்டை எப்ப மாத்த போறாங்க ?அதுக்கு பேசாம கீரோ வையே போட்டு தள்ளிட்டா நம்மளாவது நிம்மதியா படம் முடிஞ்ச திருப்தி ல தியேட்டரை விட்டு வெளியில வருவோம்ல ?????






7)அடிக்கடி பீடா(feeeeeed) நடந்து வந்து வந்து ஸ்டைல் ஆ நிக்கறேன் பேர் வழி ன்னு ஏன் புள்ளதாச்சி பொம்பள கணக்கா ஏன் விஜய் நிக்கறாரு..அசதோமா சத்கமைய கு நடன இயக்குனர் கதாநாயகனுக்கு அமைத்து குடுத்த இந்த நடன பாவம் உண்மையிலேயே பாவம்[pavam] சிறந்த நடன இயக்குனர் விருது இந்த ஆண்டு நடன அமைப்பாளருக்கு கிடைத்தாலும் கிடைக்குங்க !!!



8)வில்லன அடிச்சு தூள் பண்ற கடைசி கட்டத்துல எப்டி கூலிங் க்ளாஸ் போட்டு சாவடிக்கிறாரு ?ரெடியா சண்டை போடா வரத் தெரியுதுல்ல அப்போ ரொம்ப முக்கியம் கூலிங் க்ளாஸா இல்ல துப்பாக்கியா ?த்தோடா இது கூட தெரியாம இன்னாப்பா கீரோநீ ???



9).அதுல ஹாய் டெக் காமெடி உலக வரலாற்றில் முதல் முறையாக நம்ம வேதா தான் எலெக்ஷன் ல நிக்காமலேயே அமைச்சர் ஆகறாரு.இப்படி கூட நடக்குமா ?என்ன கொடுமை சனங்களே இது ???????


10)ஐயா டைர ட்டகரே நீங்க செஞ்ச ஒரே நல்ல காரியம் விசய்ய சிப்பு போலீஸ் ஆக்காம விட்டதுதான்.அதுகூட இல்லாம கடைசியில் சொல்வீங்களே பிட்டு சான்குல நகரு நகரு நகரு ன்னு மக்களை நல்ல விதமா விரட்டினீங்க பாருங்க ..அங்க நிக்கறீங்க ..இது தான் டைரெக்டர்டச் ...........




அதுனால நண்பர்களே யாரும் வேட்டைக்காரன் போய்டாதீங்க திகில் படத்த காட்டிலும் பல புதிர்கள் உடையது நீங்க போய் உங்களை குழப்பிக்கிட்டு வராதீங்க உஷாரு சனங்கள உஷாரு.... vartaaaaaa