இன்று புலம்பிக்கிட்டு இருக்கும் நேரம் சரியா இரவு ஏழு மணி ..
சரி நம்ம வேலையையும் நம்பி லோன் தாராங்க நு ஒரு ப்ளாட்டை வாங்கலாம் என முடிவு பண்ணினா வீட்டுல இருக்கிற வயசான ஆயாக்கள் தொல்லை தாங்கல ..ஊருக்கு ஒதுக்குபுறமா கம்மியான விலையில் ஒரு இடத்தை வாங்கி போட்டு அங்கே வீடு கட்டணுமாம் பிறகு பத்து பதினஞ்சு வருஷத்தில அந்த வனாந்தரமும் பல கட்டிடங்கள் சூழ வளர்ச்சி அடைஞ்சுடும் நாங்கலாம் அந்த காலத்தில என ஆரம்பிச்சு இன்னுமும் அது முடிக்கறதுக்குள பொட்டிய தூக்கிட்டு ஊருக்கு வேலைய பாக்க வந்தாச்சு ..ஹ்ம்ம் இப்போ எல்லா வசதியோட வாழணும்னு ஆசைப்பட்டா ஆயா பதினஞ்சு வருஷம் காக்க சொல்லுது இதுக்கு சுடுகாட்டிலேயே பட்டா கிடைச்சா அங்கேயே இடத்தை வாங்கி இப்போவே ரிசேர்வ் பண்ணிக்கலாம் போல் எப்போதான் சுதந்திரமா முடிவு எடுக்க விடுவாங்களோ இந்த வீட்ல உள்ள பெரியவாஸ் எல்லாம் ..
(புலம்பல்கள் தொடரும் )