Tuesday, December 1, 2009

அம்மாவின் மரணம்



எண்ணத்தில் இருந்தும் வார்த்தைகளில் வரி வடிவம் கொடுக்கமுடியாமல் இருந்த எனக்கு தஸ்லிமாவின் இந்த கவிதை என் ரணத்தின் ஆழங்கள்.. இந்த சோகத்தின் முடிவிலும் தஸ்லிமா ஒரு சந்தோசத்தை எனக்கு தந்திருக்கிறார்..இந்த கவிதை தஸ்லிமாவின் வாயிலாக எனதுயிர் தாய்க்கு சமர்பிகின்றேன்


அம்மாவின் மரணம்

I

இறுதியில் எனது தாயின் கண்கள்
முட்டையின் மஞ்சள கரு போலாகியது
ஏப்போதும் வெடித்துவிடும் போல
நிரம்பி வழியும் தண்ணீர் தேக்கி போல
அவளது வயிறு உப்பியபடியிருந்தது
இனி அவளால் எழுந்து நிற்கமுடியாது
உட்காரமுடியாது
அவளது விரல்களைக்கூட நகர்த்தமுடியாது
அப்படியே கிடக்கிறாள்

ஓவ்வொரு காலையிலும் உறவினர்கள் வருகிறார்கள்
ஓவ்வொரு மாலையிலும்
வெள்ளிக்கிழமை புனிதத் திருநாளில்
அம்மா மரணிக்க ஏற்பாடு செய்யும்படி சொல்லிச் செல்கிறார்கள்
லா ஏலாஹா இல்லாஹா எனச் சொல்லியபடி
அல்லா ஒருவனே எனச்சொல்லியபடி
முங்கரும் நாகிருமான
இரண்டு தேவதைகள் கேள்விகள் கேட்க வரும்போது
அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிடவேண்டாம்
என எச்சரிக்கை செய்கிறார்கள்

கடைசித் தீர்ப்பின் பொருட்டு அல்லாவிடம்
அவனது பதில்களை எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள்
அறையைச் சுத்தமாக வைத்திருக்கும்படி
முற்றத்தைச் சுத்தமாக வைத்திருக்கும்படி
வாசனைத் திரவியங்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளும்படி
மரணம் இறுதியாக வரும் பொருட்டு தயாராக இருக்கும்படி

பசி கொண்ட நோய் இப்போது
அம்மாவின் உடம்பின் மீது நடனமாடத் தொடங்கிவிட்டது
அவளது எஞ்சிய பலத்தையும் உறிஞ்சத் தொடங்கிவிட்டது
கண்குழியிலிருந்து விழிகள் பீதங்கத் துவங்கிவிட்டது
மார்புக் கூட்டினின்று காற்று களவாடப்பட்டு
நா வரண்டு பொயிற்று
ஆவள்முச்சுக்காகப் போராடும்போது
அவளது நெற்றியும் இமைகளையும் வலியால் நெறிபடுகிறது
முழு வீடும் சத்தம் போடுகிறது
தமது நல்லெண்ணத்தை தீர்க்கதரிசிக்கு தெரிவிக்கும்படி
அவள் சொர்க்கத்துக்குச் செல்வாள் என்பதில்
எவருக்கும் சந்தேகமில்லை

வெகு சீக்கிரமே முகமதுவுடன் கைகோர்த்தபடி
ஒரு அழகான மதியநேரத்தில்
ஒரு தொட்டத்தில் அவள் நடப்பாள்
இருவரும் பறவைக் கறியை உண்பார்கள்
சொர்க்கத்தோட்டத்தில் அவள் முகமதுவுடன் சேர்ந்து நடப்பாள்

ஆனால் இப்போது பூமியைவிட்டுப் பிரியும் நேரமான இப்போது
ஆவள் தயங்குகிறாள்
வெளியேறுவதற்கு மாறாக
ருசிக்கும் அரிசிச் சமையலை எனக்கு ஆக்கிப்போட விரும்புகிறாள்
ஹில்ஸா மீனை வறுக்க தக்காளிக்குழம்பு வைக்க
தோட்டத்தின் தெற்கு மூலையில் இருந்து
முற்றாத இளநீர்காயை எனக்குப் பறித்து வர விரும்புகிறாள்
எனது நெற்றியில் வந்துவிழும் கூந்தல் கற்றைகளை விலக்கும் பொருட்டு



II

எனக்கு நிச்சயமாகத்தெரியும் மறுபிறப்பு என்பது இல்லை
இறுதித்தீர்ப்பு நாள் என்பதும் இல்லை
சொர்க்கம் பறவை இறைச்சி திராட்சைரசம்
கருநீலத் தேவதைகள்-
இவையனைத்தும் மதவாதிகளின் வலைகளன்றி வேறில்லை
அம்மா சொர்க்கத்துக்குப் போகப் போவதில்லை
எவரோடும் எந்தத் தோட்டத்திலும் அவள் நடக்கப்போவதில்லை

வஞ்சகம் நிறைந்த ஓநாய்கள் அவளது சவக்குழியில் நுழையும்
அவளது சதையைப்புசிக்கும்
அவளது வெண்ணிற எலும்புகள் காற்றினால் சிதறப்படும்
இருப்பினும்
ஏழ்வானங்களுக்கு அப்பாலோ அல்லது வேறெங்கேயோ இருக்கும்
சொர்க்கத்தை நான் நம்ப வேண்டும்

ஒரு அதி உன்னதமான பிரம்மாண்டமான சொர்க்கம் நோக்கயே
கடினமான பாலத்தை மிகச் சுலபமாக வலியின்றி
எனது அன்னை கடந்து செல்ல முடியும்.
திடகாத்திரமாக ஆண் தீர்க்கதரிசி முகமது அவளை வரவேற்பார்.
அவளைத் தழுவிக் கொள்வார்
அவரது மயிரடர்ந்த மார்பில் அவளைக் கரைந்துபோகுமாறு செய்வார்.

நீருற்றில் குளிக்க அவள் விரும்புவாள் நடனமாட விரும்புவாள்
அவள் முன்னெப்போதும் செய்திராத அனைத்தையும் அவள் செய்வாள்
தங்கத்தட்டில் பறவைக் கறி அவளுக்கு வந்துசேரும்
அல்லாவும் தோட்டத்திற்கு வெற்றுக் கால்களுடன் வருவார்
ஒரு சிவப்புமலரை அவளது கூந்தலில் சூடுவார்
ஆதுரமாக முத்தமொன்று தருவார்
இறகுகளின் மஞ்சத்தில் அவள் உறங்குவாள்
எழுநுாறு விசிறிகள் வீசப்படும்
அழகான இளம் பையன்களால் குளிர்ந்த நீர் பறிமாறப்படும்.
அவள் சிரிப்பாள்.
ஆதி சந்தோஷத்தினால் அவளது முழு உடலும் பூக்கும்.
பூமியில் அவளது துன்பமயமான வாழ்வை அவள் மறந்து போவாள்



III

கடவுள் நம்பிக்கையற்ற எனக்கு
எனது பிரியமான அன்னையின் சொர்க்கத்தைப் பற்றி
கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்பது
எத்துணை பரவசமாக இருக்கிறது


........தஸ்லிமா

No comments:

Post a Comment