Monday, August 29, 2011

தோ பாரு கானா பாட்டு...

கடலுக்குள்ள நண்டும்
கடைல விக்கிற நண்டும்
கம்மாகர நண்டும்
கால வாரும் மண்டு ...

டூரிங் கொட்டாய் மண்ணும்
டுடோரியல் கண்ணும்
டூப்படிக்கிற வாயும்
டுமீலுனு போகும் ....

பிட்டடுச்சு எழுதினாலும்
பீஸு கட்டணும் ஸ்கூலுக்கு
பீஸ் போன பல்ப்புனாலும்
பிடுச்சுப் பாரு ரத்தம்வரும் ...

சுட்டு சுட்டு போட்டாலும்
சும்மா கெடக்கும் அடுப்பு
தூண்டி விட்டு பாரு
காட்டையுந்தான் அழிக்கும்...

சுட்டு போடும் மேட்டரும்
துருப்பிடுச்ச மோட்டரும்
தூசு பட்ட வாட்டரும்
தூக்கி தானே வீசணும் ....

தார் ரோட்டு தாரும்
உருக்கினாத்தான் சாரும்
ஊறுகாயும் மோரும்
உப்பில்லாக்கா நோவும் ...

##########################################

அரசு பஸ்சுல
திருடும் ஆசாமி பாரு
பிடிபட்டா கூட
சிறைக்குள் இலவச சோறு ...

வெண்ணை எடுக்கா மோரும் உண்டு
வேப்பமர நிழலும் உண்டு
காவலுக்கு ஆளும் உண்டு
களி துண்ணவா நோகும் கண்ணு

அரசு பஸ்சுல
திருடும் ஆசாமி பாரு
நம்ம ஊரு சாமிய விட
safeaa இருப்பான் பல மடங்கு ஜோரு ..

############################################

itz my way athichooooodi
அ...க்கு அடுத்து ஆவன்னா
நான் பாட போறேன் கானா

இ..க்கு அடுத்து ஈயன்னா
ஈசல் வாழ்க்கை வாழாதே வீணா

உ...க்கு அடுத்து ஊவன்னா
உலகம் என்றுமே உருண்டை தானா

எ..க்கு அடுத்து ஏயன்னா
ஏட்டு சுரைக்காயா இருக்காதே நீ வீணா

ஐ..ல இருக்கு நைனா
ஐம்பதில் வளையாதென மூத்தோர் இட்டுககட்டுவதென்னா..

ஒ...க்கு அடுத்து ஓவன்னா
இது ஒன்பது வாசல் உடலண்ணா

ஔ..க்கு அடுத்து ஃன்னா
ஔவை மொழி எஃகுவால் உருதின்னா ..

#########################################################
ஆளில்லா வீதியெங்கும்
அரசியல் தலைகள் எல்லாம்
விலைபோகா சுவர்களில்
ஒட்டிக்கொண்டாங்க ....

.
ஜோக்கான சொக்காவோடு
சைகை எல்லாம் பக்காவோடு
வெத்துவேட்டு வசனத்தோடு
வெளுத்துப் போன சிரிப்போடு
ஆளுக்கொரு கொடியோடு
அருவெறுத்த சலுகையோடு--கொடும
அஞ்சு வருசம் ஒளிஞ்சுருந்த
ஒட்டு மொத்த அழுக்குகளும்
ஒன்றுகூடி இளிக்கிறாங்க இன்று
நகரெல்லாம் சொலி சொளிப்பாக,
நம் மனமெலாம் சலி சலிப்பாக .... ....


விட்டாக்க ..இடுகாட்டுப் பக்கம் கூட
வந்து நிப்பாங்க ...
எரிந்ததெல்லாம் போதுமுனு
ஓட்டு கேப்பாங்க ....

No comments:

Post a Comment