Sunday, August 28, 2011

ஒரு நண்பரின் கதை இது...






இந்த கதை எழுத எனக்கு தூண்டு கோலாக இருந்த எனது நண்பருக்கு எனது குரு வணக்கங்கள்..[ஹ்ம்ம் எனன செயய வாழ்கையே ஒரு டிராமா இப்டிலாம் துதி பாட வேண்டி இருக்கு கொடுமை டா சாமிகளா]இந்த கதையில் வரும் சம்பவங்களும் பெயரும் யாரையும் குறிப்பன அல்ல கற்பனையே என்று போடுமாறு கேட்டு கொண்டார்...[சுட்டு போட்டாலும் தோசைய தோசைன்னு சப்பாத்திய சப்பாத்தின்னு தான் சொல்வ இந்த குருவு பொய் சொல்லமாட்டா ] ஓகே கதைக்கு போகலாம் ரெடி ஸ்டார்ட் 1...2....3..****************************************************************************************************************நம்ம கதையின் நாயகன் அங்குசாமி ஒரு சாப்பாட்டு பிரியர்...எந்த அளவு சாப்பாட்டு பிரியர் என்றால் வீட்லயே சாப்பிட்டு கிட்டே இருந்தா போர் அடிக்கும்னு அழகா மந்த்லி பிளான் நோட்ல போட்டுக்கிற அளவு முன் யோசனைக்காரர் [Image]..அந்த மாசம் எத்தனை கல்யாணம் போகலாம்,யார் வீட்டுல எல்லாம் விஷேசம் வரும்.அது போக எத்தனை நாள் ஹோட்டல்ல சாப்பிடலாம்னு எதுவுமே ப்ளான் பண்ணி பண்ணுவார்[Image]...கஷ்டமான ட்ரைனிங் மற்றும் மொக்கையான மீட்டிங்னாலும் அங்கே கிடைக்கிற இஞ்சிடீ ,சமோசாக்காக மீட்டிங் போற அளவு மன தைரியக்காரர்[Image] ...காசு செலவானாலும் அத பத்தி கவலை இல்லை,வயிறார விதவிதமா சாப்பிடனும்னு வெளிமாநிலங்களுக்கு கூட அசராம கல்யாணம் அட்டென்ட் பண்ணுவாரு நம்ம ஹீரோ ..அதும் ஏரோபிளைன்ல போனா அவங்க கொடுக்கிறத தான் சாப்பிடனும்னு ட்ரைன்ல ரெண்டு மூணு நாள் பிரயாணம் செஞ்சாலும் பரவாயில்லை ,ஆங்காங்கே ஸ்டேஷன்ல ரயில் நிக்கும் போது அங்கே கிடைக்கிற வடை,பஜ்ஜி,சமோசா தான் சரி ருசின்னு சொல்லுறதுதான் அவரோட ரசனை[Image] ...அரசு அலுவலகத்தில தலைமை பீடத்தில தூங்குறதும் ஆர்குட்ல மற்றும் பேஷ்புக் இணையதளத்தில விவாதிக்கிறதும் தான் அவரோட தினசரி நடவடிக்கை[Image]
கதையின் முக்கிய திருப்பம் ..

நமது கதை நாயகனின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது அவருக்கு மட்டும் இல்ல நமக்குமே பேரதிர்ச்சியுடன் கூடிய மாபெரும் திருப்பம் .[Image].என்னவென்றால் அதுவரை வாலிபராக இருந்த நம் கதையின் நாயகன் பதவி உயர்வு பெற்றார்[Image] ..இது உழைப்பால் உயர்ந்த பதவியல்ல ..உண்ணுவதால் உயர்ந்த பதவி [Image]..வெறும் அங்குசாமியாக இருந்தவர் அங்குசாமி அங்கிலாக மாறினார்..எப்பேர் பட்ட உணவையும் அதாவது {வடக்கு,கிழக்கு,மேற்கு,தெற்கு } ஜீரணிக்கும் சக்தி கொண்ட அவருக்கு இந்த அங்கிள் என்ற பதவியை இன்று வரை ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை [Image]..அலுவலகத்தில் அவருடைய நிக் நேம் A .M அதாவது அங்குசாமி மாமா என்று தெரிய வந்த போது இடிந்தே போனாலும்[Image],அவ்வப்போது ரெண்டு வடைகள் சாப்பிட்டே அந்த காயத்தை தற்போது ஆற்றிக்கொண்டார்
முதன்முறையாக கண்ணாடியின் முன் தன்னை பார்த்தபோது தான் விஸ்தாரமான தன் வயிறு[Image] முகத்திற்கும் கழுத்துக்கும் இடைவெளி இல்லாமல் இருப்பதும் ,தன் காலை தானே குனிந்து பார்க்க முடியாமல் இருப்பதெல்லாம் பார்த்து[Image] அண்ணாமலை ரஜினிகாந்த் போல சபதம் எடுத்தார் ..இந்த நாள் என் வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் உண்டு பண்ண போகும் நாள் ..அடுத்த வருடம் இதே நாள் இதே நேரம் நான் அஜித் போல ஆகிடுவேன் ..அது என்னால முடியும்னு முதலில் தன்னுடைய எடைய குறைக்கிற முடிவோடு உடற்பயிற்சி நிலையம் சென்றார் [Image]..எடை மெஷினில் ஏறி நின்றால் மீண்டும் மீண்டும் பூஜ்ஜியத்தையே காட்டி அவர் சதம் அடித்து அதற்கும் மேல் அவர் எடை உள்ளது என்று நிருபித்ததும் உடலை குறைத்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.[Image]. ..கடையில் ட்ரக் சூட் பொருந்தாமல் ஒரு வாரம் அலைந்த கதையெல்லாம் வேறு [Image] ...தையல்காரனிடம் உடற்பயிற்சிக்கான உடைகள் தைத்து ஒரு சூறாவளி கிளம்பியதேனு பாடிக்கிட்டே உடற்பயிற்சி செய்ய ஆயுத்தமானார் ..[Image]
படுத்து எழுந்து செய்யும் உடற்பயிற்சியில்,படுத்தால் எழுந்து கொள்ள முடியவில்லை ..எழுந்தால் குனிய முடியவில்லை [Image]..இதனால் நம்ம அங்குசாமிக்கு முதன்முறையாக பயம் வந்தது ,நம்மால் செய்ய முடியாதோ என்று[:9]..இருந்தாலும் முடியுமென்று அருகருகே உடற்பயற்சி செய்பவர்களை பார்த்து ஒரு வடிவேல் லுக் விட்டு குரலை கனைத்து கொண்டு எல்லரும் பார்கிரர்களா என்று பார்த்துவிட்டு butterfly winger-ல் ஒரு அழுத்து அழுத்திநார். அந்தோ பரிதாபம் அவ்ளோதான் மிஷின் உடைந்தது ..ம்ம்ம்ம் நம்ம ஹீரோ அதற்கும் நஷ்டஈடாக rs. 30000 கட்டவேண்டியதாயிற்று [Image]..உடற்பயிற்சி நிலையத்தில் எந்த மிஷினையும் தொடாமல் மேனுவல் பயிற்சி செய்யவே அனுமதி கிடைத்தது ...எல்லா உடற்பயிற்சியும் இரண்டு முறை செய்தாலே இமாலய முயற்சியாகவே இருந்தது,அதை விட அகோர பசி உடற்பயிற்சி முடிந்ததும்,அதனால் மேலும் இரண்டு மடங்கு உணவு உட்கொள்ள வேண்டியதாயிற்று[Image] ...இதனால் வீட்டில் வேறு ஒரே ரகளை இருமடங்கு உணவு செய்ய முடியவில்லை என்று.இது என்னடா பிள்ளையார் பிடிக்க போய் குரங்கு வந்த கதையாக,அதிக பசி வந்து இன்னும் எடை கூடி போயிருச்சேனு தனக்குள்ளே உணர்ந்தார்[Image]....சரி இனிமேல் உடற்பயிற்சி போவதை நிறுத்திவிட்டு ..நண்பர் சொன்னது போல நடைபயிற்சி போகலாம் என்று நினைத்து தனது எடையை குறைக்கும் லட்சிய பாதை நடைபயிற்சியே என ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்க தயாரானார் நம் கதையின் நாயகன் A.M.......[Image]
அதிகாலை சுபவேளையில் ஷூ மாட்டிக்கொண்டு தன் நடை மற்றும் ஓட்டபயிற்சி பயணத்தை தொடர்ந்த முதல் நாளே நண்பர் சொன்னதை நினைவில் வைத்து நடந்தார் நடந்தார் நடந்து நடந்து அவர் ஊரிலிருந்து 50 km மேல் நடந்து அருகில் உள்ள சிறு கிராமத்திற்கே வந்து மீண்டும் வீடு போக வழி தெரியாமல் பஸ் இல் தன் இருப்பிடம் வந்துசேர்ந்தார்..ரெண்டாம் நாள் நடை பயணத்தில் இருட்டில் கவனிக்காமல் சாக்கடையில் விழுந்து சாக்கடையில் இருந்து பூச்சாண்டி போல கஷ்டப்பட்டு எழுந்து நடக்கும் பொழுது தெருநாய் வித்யாசமான உருவமாக இருக்கிதே என இவரை பார்த்து பயந்து ஓட யார் யாரை துரத்துகிறார்கள் என்றே தெரியாமல் அன்றைய jogging day ஜோக்கிங் டே ஆனது அங்கங்கு அடிபட்ட அங்குசாமி க்கு உடல் வலி ஏற்பட இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு வாரம் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லி,சொந்தபந்தங்கள் பூஸ்ட், ஹார்லிக்ஸ், வீவா சகிதம் வந்து பார்க்க நம்ம [அங்குசாமி ஆங்குசாமிஆனார்.மெதுஓட்ட முயற்சியும் அதோடு கனவானது.
விடா முயற்சியின் அடுத்த களம்


தொலைக்காட்சியில் ஆயுர்வேத மருத்துவர்கள் கதறும் ஒரு நிகழ்ச்சியை பார்த்து அவர்களின் ஆலோசனையில் மருந்து சாப்பிட்டு, தன் பருத்த உடம்பை சுருக்க முடிவு செய்தார்..இந்த முறை தான் நிச்சியம் ஜெயிப்போம் என்று ஒரு ஒளிவட்டம் அவர் தலையின் பின் சுற்ற ...உடல் எடையை குறைக்க செய்யும் மருந்தை 15000 கொடுத்து ஒரு மருத்துவரிடம் வாங்கி தன் விடாமுயற்சியை தொடங்கினார் .....
ஆஹா........ஆஹா !!!!!!!!!! என்ன ஒரு திருப்பம் மருந்து எடுத்த அன்றே நம்ம ஹீரோக்கு உணவைக் கண்டாலே பிடிக்காத உணர்வு ..பசிக்கவே இல்லை.[Image].வடை ,சமோசா எல்லாம் அவரைப் பார்த்து அழுதும் சிறிதும் திரும்பி பார்க்கவில்லை ,காரணம் டயட் கண்ட்ரோல் இல்லை..எது சாப்பிட்டாலும் வாந்தி எடுக்கத் தூண்டும் உணர்வு இருந்ததால் ,உணவைக் கண்டாலே வெறுப்பாக இருந்தது.[Image]..வீட்டில் செய்த உணவுகள் எல்லாம் தினமும் பெருமளவில் குப்பைத்தொட்டிக்கே போகும் அளவு உணவைக் கண்டாலும் காணாததுபோல் ஒதுங்கியே இருந்தார்..ஒரு வாரம் ஆகிற்று,இன்னும் ஒரு மாதம் இந்த மருந்தினால் அங்குசாமி மாமா,அங்கு ஆகிருவோம் என்ற கனவில் alps,italy,athens ஆகிய பல பல நாடுகளில் dream song அவருக்கு பிடித்த ஆம்பல் அழகியுடன் பாடி ஆடி கொண்டும் ,அவருக்கு உலக அழகன் பட்டம் கொடுப்பது போன்றெல்லாம் கற்பனையில் மிதந்து கொண்டிருந்த ஒரு அதிகாலை வேளையில் பயங்கரமான வயிற்று வலி வர தூக்கம் கலைந்து முழித்தார்[Image]. வாயிற்று வலியின் தீவிரம் தாங்காமல் மயங்கி மீண்டும் கண் விழித்த வேளையில் மருத்துவமனையில் இருந்தார்.......
என்னதான் பருத்த உடல்வாகு கொண்டவராய் இருந்தாலும்,அவருடைய குடல் சிறிதாகிற்றே[Image]...ஆமாம் அவருடைய சிறுகுடலுக்கு ஒரு வாரம் வேலை கொடுக்காமல் லீவு விட்டதில் enzymes குடலை நன்கே பதம் பார்த்திருந்தன. [Image]அமிலங்களின் பெருங்கோவத்தை அடக்க ஒரே தீர்வு ஒரு நாளைக்கு ஏழு முறையாவது உணவு உட்கொள்வதே சிறந்த மருந்து என டாக்டர்களின் prescriptionil எழுதப்பட்டு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு துரத்திவிடப்பட்டார்[Image]...வீட்டிற்கு வந்ததும் வேறு என்ன வேலை,மீண்டும் அலுவலகத்திற்கு விடுமுறை...ஒரு வார உணவையும் ஒரே நாளில் விதவிதமாக காரம் இல்லாமல் உட்கொள்ள ஆரம்பித்தார்[Image]..விட்ட ஒரு வார பணியை medical leave ல் தொடர்ந்தார்....மூன்று வேளை உணவை போட்டு மாளமுடியாத வீட்டில் ஏழு வேளைகள் செய்ய பெரிய அவஸ்தை ஆகிப்போனது ........
ஒரு வழியாக வயிற்றுவலி சரியானதும்,மீண்டும் அலுவலகம் செல்ல எத்தனித்து,தன்னை அழகு படுத்திக்கொள்ள கண்ணாடியை நாடினார் நம்ம A.M. கண்ணாடி பார்த்த நொடியில் மயக்கம் வந்து விட்டது நம்ம ஹீரோக்கு[Image],காரணம் கண்ணாடியில் ஹீரோவின் பாதி உடல் தான் தெரிந்தது..மீதி பாதி உடல் கண்ணாடி விட்டு வெளியில் இருந்தது ...இருந்தும் மனதை திடபடுத்திக்கொண்டு,மனதிற்குள் இது தான் நம் தலை எழுத்து என்று யோசித்தாலும்,அவருடைய positive attitude இப்படி யோசிக்க வைத்தது,,இந்த உணவோடும் தூக்கத்தோடும் எவ்வளவு இன்பமாக இருந்தோம்,எதற்கு இந்த வேண்டாத பல பல பிரச்சனைகள் , மாமா என்ன தாத்தா என்றே கூப்பிட்டாலும் இனிமேல் என்னையும் என் நாவிற்கு சுவை தரும் உணவையும் என்னால் பிரிந்து இருக்கவே முடியாது என்று சபதமேற்கொண்டு, காலையில் சாப்பிட்ட தோசை பற்றாத உணர்வு ஏற்பட அன்னபூர்ணா ஹோட்டலில் நுழைந்தார் நம்ம அங்கு சாமி மாமா..
இந்த கதையை படித்து விட்டு வேறு யுனானி பினானி சித்தா பித்தா போன்ற வைதியர்களோ மேலும் செயின் necklace நெட்வொர்க் சேர்ந்த amway amout போன்ற தொல்லை தரும் நிறுவனங்களோ அவரை தொடர்பு கொண்டு மருந்து என்னும் பெயரில் பணம் சம்பாதிக்க நினைத்தால் கொலையும் செய்து விட்டு ஜெயில் சாப்பாடு ருசிக்கவும் தயார் என்றும் வேண்டுமென்றால் சமையல் நிகழ்சிகளுக்கு நடுவராகவோ,ஹோட்டல் திறப்பு விழாக்களுக்கு குத்துவிளக்கு ஏற்றவோ ,இந்திய எல்லைக்கு உட்பட்ட இடங்களாக இருந்தால் தன் செலவிலேயே எங்கும் வர தயாராக உள்ளார்... மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள

anguavailable@annapoornavilas.com
phone no:9940415837

No comments:

Post a Comment