Monday, March 1, 2010

மின்னஞ்சலில் எனக்கு வந்த கேள்வி கணைகளும் அதற்கான எனது பதில்களும் :..




பெண்களிடம் தப்பித் தவறி கூட கேட்கக் கூடாத சில கேள்விகள்!

1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது!////////////////////

மானுக்கு பதுங்கிய புலியும்,பொண்ணுக்கு பயந்த ஆணும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்னு எங்க ஊரு நாட்டாமை சொல்லுவாரு அதுனால நீங்க பயபடாம பொண்ணுங்க கிட்ட இந்த கேள்வியெல்லாம் கேட்டா சூப்பரா பொட்ல அடுச்சு பதில் சொல்வாங்க இப்படித்தான் ...

1) பொண்ணுங்க யாரும் recharge பண்ண சொல்லுறதில்ல , நீங்களா ஐயோ நம்மள கூட ஒரு பொண்ணு லவ் பண்ணுறாங்கனு அசடு வழிஞ்சுகிட்டு நீங்களா சொல்லி மாட்டிக்கிறது .. கஷ்டப்பட்டு படிக்க வெச்ச parents ஏதும் கேட்டா செவுடு மாதிரி ஒன்னும் செய்யாத உங்களுக்கு இப்படிலாம் தண்டனை கண்டிப்பா வேணும்தான்.கரும்பு தின்ன கூலியா அதுனால பொண்ணுங்க அப்படித்தான் இருப்பாங்க .

.....................................................................................

2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க? ///////////

2) ஆமாம் recharge பண்ணின தொகை முடிந்து போன நீங்கதானே மறுபடியும் காசு செலவளிக்கணும் அதுக்கு பாவம் பாத்துதான் பொண்ணுங்க ஷார்ப்பா கட் பண்றாங்க.. இதுக்கு லாம் போய் படிக்க அவசியமே இல்ல.சிந்திக்கிற தன்மை இருந்தா போதும் அது எங்களுக்கு நிறையாவே இருக்கு..

.....................................................................................
3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ‘ஹி.. ஹி’ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?////////////////////

3) வடிவேல் சொல்வாரே எங்க அக்கா sooper பிகர்னு அந்த கதையா அட்டுவா பேசறது ,அப்புறம் தத்துவம் என்ற பேர்ல நெட் ல சுட்டத, தான் சொல்ற மாதிரி சொல்றது ,ஹாலிவுட் ஹீரோ லெவல் கு புருடா விடுறது இந்த கோமாளித் தனத்தை எல்லாம் கேட்டா சிரிக்காம என்ன செய்வாங்களாம் ???
.....................................................................................
4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக் கேட்டாலும் “நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க’ன்னா” நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேசத் தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம்.
அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க//////////////////

4) ஆமாம் நாங்க புத்திசாலிங்க அதுனால தான் உங்களயே பேச விடுறோம் ....எங்க கலயாணத்துக்கு அப்புறம் தான் உங்க பேச்சே மாறிடுமே அதுனால கிடைச்ச சந்தர்ப்பத்த விடாம எங்களுக்கு அடிக்கிற ஜிங் ஜாக்க அமைதியா ரசிச்சு அப்போவே கேட்டு முடிசிடுறோம் ...
.....................................................................................

5. மெசேஜ்’ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க?

இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்’க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா //////////////////////


5) ஹையோ ஹையோ குறுந்தகவல் அனுப்புரப்போ உங்க திருமுகம் அதுல தெரியாது அதுனால ரொமாண்டிக்கா அனுப்பிடுறோம் . அதே நேர்ல சொல்லு சொல்லுனு கொடுமை படுத்துரப்போ உங்க முகங்களா பாத்தா ரொமாண்டிக் அ சொல்லவா முடியும் சரி உங்க மனசு இதயம் மூளை கிட்னி லிவர் இதெல்லாம் கஷ்ட பட்ற கூடாதுன்னு வெக்க படுற மாதிரி நடிக்றோம்...

.....................................................................................
6. ‘ஹேய்… உனக்கு எப்படி அது தெரியும்?’ அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே “நான் உங்க இதயத்துல தானே இருக்கேன்… இது கூட எனக்கு தெரியாதான்னு” உடனே ஒரு டயலாக் விடுவீங்க.

இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?/////////////

6) எப்பவும் உங்கள பத்தியே புராணம் சொல்லி உயிரை எடுக்கிறது,அப்புறம் எப்படி உனக்கு தெரியும் இதுனு அம்னிசியா patient மாதிரி கேட்டா அப்டித்தான் பொய் சொல்லுவோம் ...இதுக்கு டைரக்டர் கிட்டலாம் போய் அசிஸ்டென்ட் ஆக வேண்டாம் பொய் சொல்ல தெரிஞ்சா போதும் ...

.....................................................................................

7. Loss of Pay’ ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்?///////////////

7) ஹ்ம்ம் எதோ பைக் race ல கலந்துகிட்ட வீரர் மாதிரி கனவு கண்டுகிட்டு,.ரோட் ல வண்டி ஓட்றோம்னு எண்ணம் இல்லாம track ல ஓட்ற மாதிரியும் ,கோல்ட் மெடல் உங்களக்கு யாரும் குடுக்கிற மாதிரியும் தண்ட கனவுல வேற எண்ணத்தோட ஸ்பீட் ல போன நாங்க எப்படி உங்கள நம்பி கூட வரமுடியும்...எதோ தப்பிச்சீங்க கைப்பைய நடுவுல வைக்கிறோம் . இதே கத்திய நடுவுல வெச்ச உங்க நிலைமையெல்லாம் என்ன ஆகும்... நாங்கலாம் ரொம்ப இரக்கம் உள்ளவங்க சரியா ...
.....................................................................................

8)நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும்.
ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா///////////////


8) இந்த gift விசயத்தில உண்மை என்னான்னா கல்யாணத்துக்கு தான் நாங்க உங்களக்கு பேங்க் பாலன்ஸ்ல இருந்து வாகனம்,வீட்டு உபயோகப்பொருள் எல்லாம் தண்டம் அழுகிறோம்... அதுக்கெல்லாம் காசு சேமிக்க வேணாம் அதுதான் விலை மலிவான பொருள் கிபிட் பண்றோம்..ஏன் இந்த பேராசை உங்களக்கு எல்லாம்.. நீங்க லிஸ்ட் போட்ருக்க ஏதும் நாங்களா கேக்கமாட்டோம் நீங்களா வட்டிக்கு கடன் வாங்கி இதெல்லாம் வாங்கினதும் இல்லாம கஞ்ச தனமா பில்லையும் யும் எங்க கண்ல படர மாதிரி வைக்கிற உங்க திறமைக்கெல்லாம் கண்டிப்பா கலைஞர் கிட்ட சொல்லி award தான் தரனும்...

.....................................................................................
9) “உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை”ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே.

இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.///////////////////

9) ஆமாம் டெய்லி எங்கள ஒரு காரணமா சொல்லி நீ பாக்கல,சிரிக்கல,சரியா பேசலைன்னு பொய்ய சொல்லி புல் மப்புல போய்டுவீங்க நாங்க எந்த தெரு நாய்; சொறி நாய் கடிச்சதோன்னு ஒரு கவலைல தூக்கம் வராம கால் பண்ணின அட்டென்ட் பண்ற நிலமைலையா இருப்பீங்க இதுல மனசாட்சியே இல்லாம பொய் சொல்றோம்னு சொல்ற உங்கள எல்லாம் நாய் என்ன பேய் அடிச்ச கூட தப்பே இல்ல...
.....................................................................................

10) நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?


இந்த கேள்வியெல்லாம் தப்பி தவறி கேட்டுட்டு, நீங்கள் அடிவாங்கினால் நான் பொறுப்பல்ல/////////////


10) நாங்க சொல்லாததெல்லாம் நீங்களே செஞ்சு *பொருக்கி* வெச்சுகிட்டு உங்கள நீங்களே குப்பைதொட்டினு சொல்ற அளவு self confidence இல்லாம இருந்தா லைப் ல ரொம்ப கஷ்டம்ங்க... தன்னம்பிக்கை வளர்த்துக்கோங்க.....உங்கள பேங்க் லாக்கர்னு வேணும்னா சொல்லிக்கோங்க .....



ஆண்களே ரொம்ப குழப்பத்தில இருக்கீங்க போல
அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும் கேளுங்கள்.

ஏன்னா அறிவு......

சரி விடுங்க .பாவம் இல்லாததைப் பத்தி உங்க கிட்ட சொல்லி ஒரு பயனும் இல்லை ...
*************************************************************************************
பின்குறிப்பு: இதே படிச்சுட்டு மீண்டும் ரூம் போட்டு தண்ணி அடிச்சு யோசிச்சு பதில் தர முயல வேண்டாம்.. இதுக்கு பதில் அடிச்சு டைம் வேஸ்ட் பண்றதுக்கு உங்க தப்ப திருத்திக்கிட்டு உங்க துணையோட சந்தோசமா இருக்க இந்த குருவு வாழ்த்துறா . ... வரட்டா
*************************************************************************************

No comments:

Post a Comment